என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மூத்த கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கவில்லை: எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்
Byமாலை மலர்10 Jan 2018 7:54 AM GMT (Updated: 10 Jan 2018 7:54 AM GMT)
மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் மூத்த கலைஞர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என்று எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியதற்கு நடிகர் விஷால் பதில் அளித்திருக்கிறார்.
நடிகர் விஷால் மலேசியாவில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மலேசியாவில் நடிகர் சங்கம் நடத்திய கலைவிழா சிறந்த முறையில் நடந்தது. அதில் திரட்டப்பட்ட நிதி விவரம் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
எஸ்.வி.சேகர் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாது.
கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் அழைத்து உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த போராட்டத்தால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.
ரஜினி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். அப்போது எனது ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்பேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X