search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காட்டேரியாக மாறும் ஹன்சிகா
    X

    காட்டேரியாக மாறும் ஹன்சிகா

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா, தற்போது படவாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நிலையில் அவர் அடுத்ததாக காட்டேரியாக அவதாரம் எடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா சமீபத்தில் பட வாய்ப்பின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகியது. 

    தனது நண்பர்களிடம் பட வாய்ப்பு கேட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானார். அதர்வா போலீசாக நடிக்கும் இந்த படத்தில் ஹன்சிகாவுக்கும் அழுத்தமான கதபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. 

    இந்நிலையில், `யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் `காட்டேரி' படத்தில் நடிக்க ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுந்தர்.சி. இயக்கத்தில் `அரண்மனை' படத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    `காட்டேரி' படத்தில் வைபவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் காமெடி கலந்த த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. 
     
    ஹன்சிகா நடிப்பில் `குலேபகாவலி' படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக இருக்கிறது. 


    Next Story
    ×