search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனக்கு அக்கா மட்டுமே: தங்கை குறித்து வெளியாகிய செய்திக்கு அஞ்சலி விளக்கம்
    X

    தனக்கு அக்கா மட்டுமே: தங்கை குறித்து வெளியாகிய செய்திக்கு அஞ்சலி விளக்கம்

    தமிழ் சினிமாவில் முன்ணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்க வருவதாக வெளியான தகவலை அடுத்து, தனக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் இருப்பதாக அஞ்சலி கூறியிருக்கிறார்.
    ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடிதெரு’ அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்து இருக்கிறார். எனினும் அவரது சித்தியால் ஏற்பட்ட குடும்ப தகராறால் சில காலங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், ஜெய்யுடன் இணைந்து ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யா தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாவதாகவும், தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.


    தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் ஆரத்யா

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி தனது அக்காவுடன் தான் எடுத்த செல்பியை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனக்கு அக்கா மட்டுமே இருக்கிறாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    அப்படியென்றால் அந்த ஆரத்யா யார் என்று யோசிக்கும் போது அவர் அஞ்சலியின் சித்தியான பாரதியின் மகள் என்று கூறப்படுகிறது. அவர்கள் மீதுள்ள அதிருப்தியாலேயே அஞ்சலி இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×