என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் பதவிக்கு திரும்பினார் ஆறுச்சாமி
Byமாலை மலர்30 Sep 2017 7:52 AM GMT (Updated: 30 Sep 2017 7:52 AM GMT)
ஹரி இயக்கத்தில் வெளியான ‘சாமி’ படத்தில் ஆறுச்சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் இன்று முதல் ஆரம்பாமாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் போலீஸ் வேடத்திற்கு திரும்பியுள்ளார் விக்ரம்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதில் ஆறுச்சாமி என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவித்தார்கள்.
சமீபத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பட்டியலை படக்குழுவினர் அறிவித்தனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, விவேக், சூரி உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். தமீன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற படப்பிடிப்பு பூஜையில், நடிகர் விக்ரம், பாபி சிம்ஹா, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இப்படத்தின் முதல் பாதி திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இரண்டாவது பாகத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பட்டியலை படக்குழுவினர் அறிவித்தனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, விவேக், சூரி உள்ளிட்ட பலரும் நடிக்க இருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கிறார். தமீன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெற்ற படப்பிடிப்பு பூஜையில், நடிகர் விக்ரம், பாபி சிம்ஹா, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இப்படத்தின் முதல் பாதி திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இரண்டாவது பாகத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X