என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Byமாலை மலர்25 Sep 2017 2:41 AM GMT (Updated: 25 Sep 2017 2:41 AM GMT)
மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி பெண்களை மையமாக வைத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, எழுதி, இயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெண்களை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வருகின்ற வேளையில், அதிரடி, மர்மம், திரில்லர் கட்டமைப்பிலான படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. காதல் காட்சிகள் இன்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்டு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த படத்திற்கு பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, `விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ். இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கலை இயக்குநராக டி.ராமலிங்கமும், இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்த படத்தை பேப்பர்லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. இத்திரைப்படத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்படும் என்று இயக்குனர் பிரியதர்சினி கூறியிருக்கிறார்.
பெண்களை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வருகின்ற வேளையில், அதிரடி, மர்மம், திரில்லர் கட்டமைப்பிலான படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. காதல் காட்சிகள் இன்றி அதிரடியான காட்சிகளும், திருப்பங்களும் கொண்டு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த படத்திற்கு பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்ய, `விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம்.சி.எஸ். இப்படத்திற்கும் இசையமைக்கிறார். கலை இயக்குநராக டி.ராமலிங்கமும், இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன் படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்த படத்தை பேப்பர்லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பு துவங்குகிறது. இத்திரைப்படத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி தினத்தில் வெளியிடப்படும் என்று இயக்குனர் பிரியதர்சினி கூறியிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X