என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய் சேதுபதியை அடுத்து விக்ரமுடன் மோதும் பாபி சிம்ஹா
Byமாலை மலர்20 Sep 2017 2:28 PM GMT (Updated: 20 Sep 2017 2:28 PM GMT)
விஜய் சேதுபதியுடன் ‘கருப்பன்’ படத்தில் வில்லனாக மோதும் பாபி சிம்ஹா, அடுத்து விக்ரம் படத்தில் வில்லனாக மோத இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கருப்பன்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். வில்லனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். இப்படத்தில் பாபி சிம்ஹாவின் வில்லன் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘சாமி 2’ படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க இருக்கிறார்.
விக்ரம் தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’ படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ‘சாமி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஹரி இயக்க இருக்கும் இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதையடுத்து விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘சாமி 2’ படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க இருக்கிறார்.
விக்ரம் தற்போது ‘துருவ நட்சத்திரம்’, ‘ஸ்கெட்ச்’ படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ‘சாமி 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஹரி இயக்க இருக்கும் இப்படத்தில் விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X