என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மீண்டும் பயமுறுத்த வரும் ராகவா லாரன்ஸ்
Byமாலை மலர்22 Aug 2017 4:58 PM GMT (Updated: 22 Aug 2017 4:58 PM GMT)
திகில் படங்களான முனி, காஞ்சனா பட வரிசையில் மீண்டும் ரசிகர்களை பயமுறுத்த வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்
நடன இயக்குனராய் திரையுலகில் அறிமுகமான ராகவா லாரன்ஸ், பின்னர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியானது. தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லாரன்ஸ். இந்தப் புதிய படத்தை இவரே நடித்து, இயக்கவிருக்கிறார்.
மேலும் இந்தப் படம் ‘முனி’ பாகங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திகில் காமெடி வரிசையில் வெளியான ‘முனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா (முனி 2), காஞ்சனா 2 (முனி 3) ஆகிய அதன் முந்தைய பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடை நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘முனி 3’ படத்தின் இறுதியிலேயே ‘முனி 4’ விரைவில் என லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தப் படம் ‘முனி’ பாகங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. திகில் காமெடி வரிசையில் வெளியான ‘முனி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, காஞ்சனா (முனி 2), காஞ்சனா 2 (முனி 3) ஆகிய அதன் முந்தைய பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடை நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘முனி 3’ படத்தின் இறுதியிலேயே ‘முனி 4’ விரைவில் என லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்தப் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X