என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சுசீந்திரன்
Byமாலை மலர்1 Aug 2017 10:17 AM GMT (Updated: 1 Aug 2017 10:17 AM GMT)
`அறம் செய்து பழகு' திரைப்படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அறம் செய்து பழகு’.
‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக மெஹரீன் என்ற தெலுங்கு நடிகை இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் ரிலீசுக்கு தாயராகி இருக்கிறது. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
" `அறம் செய்து பழகு' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து நான் இயக்கும் திரைப்படத்தில் `ஆதலால் காதல் செய்வீர்' போல், முழுவதும் புதுமுக நடிகர்களே நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதை இது. இத்திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்... இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து உள்ளது. நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
ஒரு பெண்ணின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம்... இம்மாத இறுதியில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்... "
இவ்வாறு கூறியிருக்கிறார்.
‘அன்னை பிலிம் பேக்டரி’ நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக மெஹரீன் என்ற தெலுங்கு நடிகை இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் ரிலீசுக்கு தாயராகி இருக்கிறது. இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
" `அறம் செய்து பழகு' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து நான் இயக்கும் திரைப்படத்தில் `ஆதலால் காதல் செய்வீர்' போல், முழுவதும் புதுமுக நடிகர்களே நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதை இது. இத்திரைப்படத்திற்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார்... இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து உள்ளது. நவம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
ஒரு பெண்ணின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளோம்... இம்மாத இறுதியில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்... "
இவ்வாறு கூறியிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X