search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா
    X

    ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா

    நடிகர் ஆரி தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. இவருக்கும் நதியா என்பவருக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், ஆரி-நதியா தம்பதியருக்கு கடந்த பிப்ரவரி 5-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.

    லண்டனில் பிறந்த குழந்தையை காண்பதற்காக சமீபத்தில் ஆரி லண்டன் சென்றிருந்தார். இதையடுத்து, லண்டனில் குடும்பத்தார்கள் முன்னிலையில் எளிமையான முறையில் பெயர் சூட்டு விழா நடத்தி முடித்துள்ளார். அப்போது குழந்தைக்கு ஆரி-நதியா இருவருடைய பெயர்களில் உள்ள எழுத்துக்கள் குழந்தையின் பெயருக்கு வரும்படி ‘ரியா அனகாரிகா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.



    “எங்கள் வீட்டு தேவதைக்கு உங்கள் அனைவரின் அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என ஆரி தெரிவித்துள்ளார். ஆரி நடிப்பில் உருவாகியுள்ள ‘நாகேஷ் திரையரங்கம்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×