search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெபண் பரிதாப சாவு"

    • மாரியம்மாள் (வயது 54). இவருக்கு சற்று கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது.
    • தண்ணீர் என நினைத்து கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து விட்டார்.

    சேலம்:

    சேலம் மரவனேரி கோர்ட்டு ரோடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சித்தன் . இவரது மனைவி மாரியம்மாள் (வயது 54). இவருக்கு சற்று கண் பார்வை குறைபாடு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி மாலை மாரியம்மாள் தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்து விட்டார். அதைத்தொடர்ந்து கடும் வலியால் அவதிப்பட்ட மாரியம்மாளை உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×