search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ெஜயில் தண்டனை"

    • ரூ.2000 அபராதம் விதிப்பு
    • ஜே.எம்.நீதிமன்றம் தீர்ப்பு

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 32) இவரது நண்பர் கோபிநாத் (34) ஆகிய 2 பேரும் கடந்த 2018-ம் ஆண்டு திருவலத்திலிருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் சென்றனர்.

    அப்போது எதிரே திருவலம் நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோபிநாத் பலத்த காயமடைந்தார்.

    இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் ரிஸ்வான் என்பவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை ஜே.எம்.நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் நேற்று மாஜிஸ்திரேட் நவீன் துரைபாபு, ரிஸ்வானுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    ×