search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிட்டாச்சி எந்திரம்"

    • ஹிட்டாச்சி எந்திரம் மூலமாக மணல் தோண்டி அகற்றம்
    • ரெயில்வே கேட்டை 4 மாதம் மூடி வைத்திருந்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவர்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே ஊட்டு வாழ்மடம் கருப்புக் கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் உள்ள வர்கள் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கோட்டை கடந்து தான் நாகர்கோவிலுக்கு வந்தனர். இந்த ரெயில்வே கேட் தினமும் 40 முதல் 50 தடவை மூடப்படுவதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவி கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். அவசர சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு செல்பவர்களும் இந்த கேட்டில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தனர்.

    எனவே இந்த பகுதியில் சுரங்கப்பாதையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை யடுத்து ஊட்டுவாழ்மடம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பணி களை மேற்கொள்வதற்காக அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை 4 மாதங்கள் மூடப்படும். எனவே பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    ரெயில்வே கேட்டை 4 மாதம் மூடி வைத்திருந்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவர்கள். 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டும். எனவே தற்போது உள்ள ரெயில்வே கேட்ட அருகே தற்காலிக ரெயில்வே கேட் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று ஊட்டுவாழ் மடம் பகுதியில் தற்காலிக ரெயில்வே கேட் அமைப்ப தற்கான பணிகள் நடந்தது. தற்பொழுது அந்த பகுதியில் தற்காலிக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டதையடுத்து சுரங்கப்பாதை அமைக்கப் பட உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதைத்தொ டர்ந்து சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் ஜே.சி.பி., ஹிட்டாச்சி எந்திரங்கள் மூலமாக மணல் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை 8 மீட்டர் நீளத்திலும் 4.5 மீட்டர் உயரத்திலும் அமைக் கப்படுகிறது. 80 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இந்த சுரங்கப்பாதை பாதைக்குள் மழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் அமைக்கவும் பஸ்கள் உள்பட கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும் அமைக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. பகலில் போதிய வெளிச்சமாக இருக்கும் வகையில் சுரங் கப்பாதை அமைக்கப்படு கிறது. 2 புறங்களிலும் வேகத் தடை அமைக்கப்படு கிறது.

    இந்த சுரங்கப்பாதை பணியை 6 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×