search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்டை"

    • கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    • குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.

    இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல், உடும்பு போன்ற வனவிலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி கறியை பங்கு போட்டது தெரியவந்தது.

    இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் கடந்த 15-ந்தேதி தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வன விலங்குகளை வேட்டையாடி களக்காடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கறியை பங்கு போட்டுள்ளதாகவும், குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தலைமறைவாகியுள்ள 20-க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று வனத்துறை தனிப்படையினர் கூறினர்.

    • கீழவடகரையில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.
    • மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் விலங்குகளை இவர்கள் குழி தோண்டி புதைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே பத்மநேரி பீட் கீழவடகரையில் உள்ள ஒரு தோட்டத்தில் அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.

    இதனை சிலர் குழி தோண்டி புதைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசா ரணையில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு கும்பல் சட்டவிரோத மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, உடும்பு, முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடியதும், அதன் கறிகளை பங்கு போட்டதும் அம்பலமானது.

    மேலும் மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் கரடி போன்ற விலங்குகளை இவர்கள் குழி தோண்டி புதைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இந்த வேட்டை கும்பலில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசன் (54) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் கறியை முக்கிய பிரமுகர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பங்கு போட்டதும் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. விசா ரணைக்கு பின் கணேசனை வனத் துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள கீழவடகரையை சேர்ந்த கசாலி கண்ணன், ஜெயராஜ், பாலன் உள்பட 20க்கும்.மேற்பட்டவர்களை கைது செய்ய களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ள்ளனர். தலைமறைவாகி உள்ளவர்கள் பிடிபட்டால் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர்.

    இதற்கிடையே கீழவட கரை மலையடி வாரத்தில் வேறு எங்காவது வன விலங்குகள் புதைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளையும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகின்றனர்.

    எனவே மலையடிவார தோட் டங்களில் வெடிகுண்டு தயார் செய்ததற்கான அறிகுறிகள் தென்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    ×