search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே வனவிலங்குகள் வேட்டையில் மேலும் 20 பேருக்கு தொடர்பு- கைதானவரிடம் நடத்திய விசாரணையில் தகவல்
    X

    கைதான ரமேஷ்.

    களக்காடு அருகே வனவிலங்குகள் வேட்டையில் மேலும் 20 பேருக்கு தொடர்பு- கைதானவரிடம் நடத்திய விசாரணையில் தகவல்

    • கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
    • குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரை கிராமத்தில் ஒரு தோட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி கரடி உயிரிழந்தது.

    இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மர்ம கும்பல் மின்சார வேலி அமைத்து கடமான், பன்றி, முயல், உடும்பு போன்ற வனவிலங்குகளை தொடர்ந்து வேட்டையாடி கறியை பங்கு போட்டது தெரியவந்தது.

    இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமையில் களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறையினர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இவர்கள் கடந்த 15-ந்தேதி தோட்டக் காவலாளியான நாகன்குளத்தை சேர்ந்த கணேசனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய கீழப்பத்தை வடக்குத் தெருவை சேர்ந்த ரமேஷ் (33) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் வன விலங்குகளை வேட்டையாடி களக்காடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் கறியை பங்கு போட்டுள்ளதாகவும், குற்றவாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தலைமறைவாகியுள்ள 20-க்கும் மேற்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று வனத்துறை தனிப்படையினர் கூறினர்.

    Next Story
    ×