search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி விழா பூங்கா"

    • தொழில் நகரமான திருப்பூரில் சினிமா தியேட்டர்களை தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை.
    • வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

    திருப்பூர் :

    தொழில் நகரமான திருப்பூரில் சினிமா தியேட்டர்களை தவிர பொழுதுபோக்கு வசதிகள் போதுமான அளவு இல்லை என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

    நகரில் ஆங்காங்கே இருக்கும் ஒரு சில பூங்காக்களும், முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா ஒன்றை மட்டுமே மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இச்சூழலில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பள்ளி, கல்லுாரி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறை காரணமாக, நேற்று காலை முதல், பூங்காவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. சிறுவர், சிறுமியர் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி உற்சாகமாக இருந்தனர். தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன், பூங்காவுக்கு வந்து மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்றனர். நேற்று ஒரே நாளில் 4000 டிக்கெட்டுகள் விற்பனையானதாக பூங்காவில் உள்ள டிக்கெட் விற்பனையாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை முதலே பூங்காவில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    ×