search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்"

    • 2-வது நாளாக தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டை
    • காருடன் 3 பேர் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு

    கவுண்டம்பாளையம்,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 18). டிப்ளமோ பட்டதாரி. குன்னூர் கார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    பெரியநாயக்கன் பாளையம், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம்பாளைம் பகுதியில் வசிக்கும் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதாப் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

    இந்தநிலையில் அவர் உறவினர்கள் சிலருடன் சம்பவத்தன்று கோட்டை பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது கன மழை கொட்டியது. இதன்கா ரணமாக அங்குள்ள ரெயி ல்வே பாலம் அடியில் தண்ணீர் வெள்ளம்போல சென்று கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் பிரதாப் மட்டும் பாலத்தின் மறுமு னையில் உள்ள ஒரு கடை க்கு நடந்து சென்றார். அப் போது அவரை வெள்ளம் திடீரென இழு த்து சென்றது. எனவே அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

    இதனை பார்த்து அதி ர்ச்சி அடைந்த உறவின ர்கள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட பிரதாப்பை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் பலனில்லை. கோட்டைப்பாளையம் ரெயில்வே பாலத்தின் அடியில் வெள்ளம்போல பாய்ந்து வந்த தண்ணீர், பிரதாப்பை இழுத்து சென்று விட்டது.

    இதுகுறித்து தகவலி ன்பேரில் பெரியநாயக்க ன்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசா ரணை நடத்தினர். தொ டர்ந்து பெரியநாயக்கன்பா ளையம் தீயணைப்பு படை க்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. இதன்அடிப்படை யில் தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேசுவரன் தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோட்டைபாளையம் ரெயில்வே பாலத்தின் அடியில் கனமழை கார ணமாக பாய்ந்து வரும் வெள்ளம், அங்குள்ள 10 அடி ஆழமுடைய கால்வாய் வழியாக செல்கிறது. எனவே பிரதாப் மேற்கண்ட கால்வாய் வழியாக அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. எனவே அவரை தேடும் பணியில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே வடம துரை, வி.எஸ்.கே.நகரை சேர்ந்த 3 பேர் ஒரு காரில் துடியலூர் -சின்னத டாகம் பகுதிக்கு சென்றனர். அப்போது தாளியூர் பகுதி யில் மழைவெள்ளம் இருக ரைகளையும் தொட்ட படி சென்றது. இருந்தபோ திலும் அந்த கார் மறு கரைக்கு செல்வ தற்காக தண்ணீரு க்குள் பாய்ந்து சென்றது. அப்போது எதிர்பாராதவி தமாக வெள்ளம் காரை அடித்து சென்றது.

    எனவே அதிர்ச்சி அடைந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக கார் கதவை திறந்து கொண்டு தப்பி பிழை த்தனர். இருந்தபோதிலும் அவர்கள் சென்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அந்த காரை மீட்கும் பணியில் தற்போது தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×