என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை"
- வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கரூர் ரெயில் - பஸ் நிலையங்களில்
கரூர்:
கரூர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டில், வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார், திடீரென சோதனை நடத்தினர்.
கடந்த 22-ந் தேதி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின், அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில், தேசிய புலனாய்வு நிறு வனம் (என்.ஐ.ஏ.) திடீர் சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து, தமிழகத்தில், சட்ட விரோதமாக செயல்பட்டு வந்ததாக, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை கண்டித்து, கன்னியாகுமரி, சேலம், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங் களில் பா.ஜ.க, அலுவலகம், இந்து அமைப்புகளின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டுகளை மர்ம நபர்கள் வீசிவருகின்றனர்.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பா.ஜ.க, அலுவலகங்கள், இந்து அமைப்புகளின் அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகளின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி வெடி குண்டு தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார், கரூர் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் தலைவர்கள் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளில், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் திடீரென சோதனை நடத்தினர். இதனால் அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்