என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீடுபுகுந்து திருட்டு"
- நகை-பணம் பறிமுதல்
- ஜெயிலில் அடைப்பு
சோளிங்கர்:
சோளிங்கரை அடுத்த நீலகண்டராயன் பேட்டை ரைஸ் மில் பகுதியை சேர்ந்தவர் கல்பனா (வயது45).
இவர் கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்று இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இவரது வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து ரூ.1 1/2 லட்சம் பணம் மற்றும் 1 1/2 பவுன் நகை, கொலுசை திருடி சென்றார்.
இது குறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். விசாரணையில் கல்பனா பக்கத்து வீட்டை சேர்ந்த அஜித் குமார் என்பவர் திருடி சென்றது தெரிய வந்தது. பின்னர் தலைமறைவான அஜித்குமாரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நீலகண்டராயபுரம் மலைப்பகுதியில் அஜித் குமார் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் மலைப்பகுதிக்கு சென்ற போது அங்கிருந்து அஜித்குமார் தப்பி ஓடி உள்ளார். அவரை ஜேம்பு குளம் கூட்ரோடு அருகே போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் இருந்து ரூ.75 ஆயிரம் ரொக்கம், நகை மற்றும் கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்