search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீச்சு"

    • மேயர் மகேஷ் எச்சரிக்கை
    • மோசமாக கிடந்த கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள வார்டு களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுவது குறித்து மேயர் மகேஷ் வார்டு வாடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்றும் மோட்டார் சைக்கிள் சென்று இன்று ஆய்வு செய்தார். சவளக்காரன் கோணம், கீழ ஆசாரிப்பள்ளம், பள்ள விளை பெருவிளை பார்வதி புரம் பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

    அப்போது பெருவிளை பகுதியில் உள்ள அனந்தனார் சானலில் ஆய்வு பணியை மேற்கொண்ட போது சானலில் முழுவதும் குப்பை கள் அதிக அளவு கிடந் தது. இந்த குப்பை களை உடனடியாக அப்புறப்ப டுத்த மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேலும் சானல்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசக்கூடாது. குப்பைகளை வீசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகராட்சி சார்பில் அந்த பகுதிகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். குப்பைகள் வீசுவர்கள் கண்டறியப்பட்டு அவர்க ளுக்கு அபராதம் விதிக்கப் படும் என்று எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பழுதான சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகளை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.மோசமாக கிடந்த கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    ×