search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிக்கு கத்திக்குத்து"

    • பணத்தகராறில் விவசாயியை 2 பேர் கத்தியால் குத்தியதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜீவாநகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது57). விவசாயி. இவர் பெரியகுளத்தில் உள்ள ராஜபாண்டி என்பவரிடம் வியாபாரம் தொடர்பாக பணம் வாங்கி இருந்தார்.

    இதனை திருப்பிதராததால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று மேல்மங்கலம் மேலத்தெருவை சேர்ந்த புல்லட் நாகராஜ் (54) மற்றும் முருகன் ஆகிய 2பேரும் நாராயணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தகராறில் நாராயணனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×