search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் பிரச்சினைகள்"

    • 30-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    'ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வருகிற 30-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் ராணிப்பேட்டை கலெக்ட ர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டு வளர்ச்சி, மீன் வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், நீர்வள ஆதார அமைப்பு, வனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்சாரம், போக்குவரத்து, பால்வளம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் தெரிவிக் கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பிரச்சினைகளை களைந்திட கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுப் பிரச்சினைகளை கோரிக்கை வாயிலாக வும், தனிநபர் பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

    இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.

    ×