search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் கலெக்டருக்கு மனு"

    • மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்பூங்கொடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு நன்செய் பட்டாதாரர் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்பூங்கொடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டு ள்ளது. வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.

    ஆகையால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமதாஸ் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், மஞ்சளாறு நீர்த்தேக்க த்திலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டால் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோ ட்டை வட்டத்துக்கு உட்பட்ட வத்தல க்குண்டு, பழைய வத்தல க்குண்டு, கணவா ய்பட்டி,

    குன்னுவ ராயன் கோட்டை ஆகிய கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெருக்கி விவசாயிகள் தங்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த தமிழக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் பொது ப்பணித்துறை அலுவல ர்களுக்கு உத்தர விடுமாறு கேட்டு க்கொள்ள ப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போது நீரினை பயன்படுத்துவோர் சங்க துணை தலைவர் ஜெயபால், செயலாளர் மணிபாரதி, பொருளாளர் பாலமுருகன், உறுப்பினர்கள் முருகன், அழகர்சாமி, குணசேகரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.

    ×