search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு விடுதி"

    • தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
    • வீராங்கனைகளுக்கான விடுதி நேரு விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, ஆக்கி, கபடி வீராங்கனைகளுக்கான விடுதி காட்பாடியிலும் உள்ளன.

    சேலம்:

    தமிழக கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவி கள் விளையாட்டு துறைகளில் சாதனை படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதி கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், பளு தூக்குதல், வாள்வீச்சு வீரர்களுக்கான விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கத்திலும், ஆக்கி வீரர்க ளுக்கான விடுதி கோவில்பட்டி யிலும் செயல்பட்டு வருகிறது.

    தடகளம், குத்துச்சண்டை, வாலிபால், கால்பந்து, பளு தூக்குதல், ஜீடோ வீராங்க னைகளுக்கான விடுதி நேரு விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, ஆக்கி, கபடி வீராங்கனைகளுக்கான விடுதி காட்பாடியிலும் உள்ளன.

    இந்த விடுதிகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு 17 வயது நிரம்பிய பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர் ஆவர். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாண விகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையத்தள முகவரியில் விண்ணப்பிக்க லாம். இதற்கான கடைசி நாள் வருகிற 1-ந் தேதி ஆகும். இதையடுத்து சிறப்பு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 3-ந் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தகவலை சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

    ×