search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலையில்லா சைக்கிள்"

    • விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயின்ற 5,423 மாணவ-மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 75 லட்சத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா பெரம்பலூர் அரசு பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதேபோல் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அமைச்சர் சிவசங்கர் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார்.

    • விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழுப்புரம் காம ராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் ஒன் மாணவ மாணவிகளுக்கு 1894 பேருக்கு ஒரு கோடி மதிப்பிலான சைக்கிள் வழங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கல்வி மாவட்டத்தின் சார்பில் இன்று விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தலைமை தாங்கினார். விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி சக்கரை வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக அனைவரையும் விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் வரவேற்றார். 

    விழாவில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு விழாவில் பேரூரையாற்றி விழுப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி , விழுப்புரம் நகராட்சி பீமநாயக்கன் ,மேல்நிலைப் பள்ளி கீழ்பெரும்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் காம ராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் ஒன் மாணவ மாணவிகளுக்கு 1894 பேருக்கு ஒரு கோடி மதிப்பி லான சைக்கிள் வழங்கினார். முடிவில்விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார்.

    ×