என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விரைவு நீதிமன்றம்"
- விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது.
- மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது.
இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.
இந்த நீதிமன்றம் முதல்கட்டமாக ஓராண்டுக்கு தனி கட்டிடம் இன்றி, தற்போதுள்ள வளாகத்திலேயே தனியாக செயல்படும். இதற்கு ஒரு நீதிபதி, 7 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நீதிமன்றத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் தனித்துவமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் விரைவாக அறிவிக்கப்படும்.
மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் புதுவையில் போக்சோ விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்