search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவு நீதிமன்றம்"

    • விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது.
    • மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்க மத்திய உள்துறை அமைச்கத்தின் அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசின் விரைவு நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் போக்சோ விரைவு நீதிமன்றத்தை புதுவையில் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளது.

    இந்த நீதிமன்றம் முதல்கட்டமாக ஓராண்டுக்கு தனி கட்டிடம் இன்றி, தற்போதுள்ள வளாகத்திலேயே தனியாக செயல்படும். இதற்கு ஒரு நீதிபதி, 7 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த நீதிமன்றத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் தனித்துவமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்புகள் விரைவாக அறிவிக்கப்படும்.

    மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் விரைவில் புதுவையில் போக்சோ விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது.

    ×