search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் பயிற்சி"

    • கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மற்றும் சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்கு முறை ஆணையம் நிதியுதவியுடன் கிட்டங்கி பராமரிப்பு குறித்த பயிற்சி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா. ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் செயலாட்சியருமான மு. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளரும் முதன்மை வருவாய் அலுவலருமான சு. உமாபதி மற்றும் காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் தே. சித்ரா ஆகியோர் வரவேற்று பேசினர். நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநர் சுரேஷ் கிட்டங்கி பராமரிக்கும் முறையை விளக்கி கூறினார்.

    இப்பயிற்சியில் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர் நாகராஜன், மணியப்பன் (ஓய்வு) ஆகியோர் விவசாயிகளுக்கு சேமிப்பு கிட்டங்கி பயன்பாட்டு தானியங்கள் அறுவடை செய்த பிறகு அவர்கள் பராமரிக்கும் முறை, நவீன சேமிப்பு கிடங்குகளை பயன்படுத்தும் முறை, பயறு வகைகளை பராமரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான சத்தியநாராயணன், காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அருணா, காஞ்சிபுரம் சரக கூட்டுறவு சார்பதிவாளர் கல்யாணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

    ×