search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி காயம்"

    • எதிரே வந்த காட்டு மாடு அவரை முட்டியதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
    • உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    நத்தம்:

    நத்தம் அருகே செந்துறை மேற்குப்பட்டி மேகாட்டுக்களத்தைச் சேர்ந்தவர் நல்லையா (வயது 55). இவர் மணக்காட்டூரில் காய்கறிகடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக மேற்குப்பட்டியில் இருந்து மணக்காட்டூர் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு மாடு அவரை முட்டி தள்ளியது. இதில் பலத்த படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு செந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

    பின்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×