என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விமான சேவை நிறுத்தம்"
- திருச்சியில் இருந்து இலங்கைக்கு பெருமளவில் விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது
- இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த இரு சேவைகளில் மதியம் இயக்கப்படும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
திருச்சி:
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் அதிக அளவில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு பயணம் செய்யும் பயணிகளைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் இலங்கை வழியாக சென்று வாழ்வது வாடிக்கை.
அதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.
அந்த வகையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து 40 ஆண்டுகளாக இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சேவை வழங்கி வருகிறது.
தொடக்கத்தில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில் பின்னர் படிப்படியாக இந்த சேவை அதிகரிக்கப்பட்டு தினசரி 2 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வந்து, மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கை நோக்கி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
அதேபோன்று இலங்கையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானம் மீண்டும் 3.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு இரண்டு சேவைகளை வழங்கி வந்தது. மேலும் இந்த இரு சேவைகளிலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 5 டன்கள் உணவு பொருட்கள் இந்த விமானத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த இரு சேவைகளில் மதியம் இயக்கப்படும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருச்சியில் இருந்து கார்கோ சேவையாக இயக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களின் சேவையான கார்கோ சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்து அறிவிப்பு முன்னறிவிப்பின்றி திடீரென நேற்று (ஜூலை 1-ந்தேதி) முதல் அமல் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்னியச் செலாவணி பாதிக்கப்படுவதுடன் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் மதிய நேர விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்