search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வள்ளிமலை"

    வள்ளிமலை சுப்பிர மணியசுவாமி கோவிலில் வன்னியகுல சத்திரிய மரபினர்களின் 6-ம் நாள் யானை வாகன பெருவிழா நடை பெற்றது.
    வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் வன்னிய குல சத்திரிய மரபினர்கள் நடத்தும் பிரசித்தி பெற்ற 6-ம் நாள் யானை வாகன பெருவிழா கோவிலில் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வரசித்தி விநாயகர், ஆறுமுகபெருமாள், தேவி வள்ளியம்மை, மலைக்கோவில் முருகப்பெருமாள் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சூரண உற்சவம் நடைபெற்றது.

    மாலை திருப்புகழ் பாராயணம், பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் டி.வி.புகழ் சந்தோஷி மற்றும் கானா பிரபா ஆகியோர் பங்கு பெற்ற நிகழ்ச்சியும், டி.வி.புகழ் சென்னை கார்த்திக்கின் மெலோடியஸ் இன்னிசை கச்சேரியும், பின்னர் கரகாட்டமும் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கந்தபெருமான் வண்ணமலர் மாலைகளாலும், மின் அலங்காரத்துடனும் யானை வாகன திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் காலை நன்கொடையாளர் களுக்கும், தேவஸ்தான ஊழியர்களுக்கும், சமுதாய பிரமுகர்களுக்கும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. யானை வாகன பெருவிழா அன்று நாள் முழு வதும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    வன்னிய குல சத்திரிய மரபினரின் 6-ம் நாள் யானை வாகன பெருவிழா தலைவர் (பொறுப்பு) உமாபதி தலைமையில் நடைபெற்றது. கட்டிடக்குழு தலைவர், எஸ்.வி.டி. குழுமத்தை சேர்ந்த பெங்களூரு கிருஷ்ணன், செயலாளர் பெங்களூரு அஸ்வினி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. லோக நாதன், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி தலைவர் கதிர்ஆனந்த், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு, சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பாரதிதாசன் பொறியியல் கல்லூரி நிறுவனர் சக்கரவர்த்தி, ஏ.எஸ்.ஏ.பேக்கரி சண்முகம், எஸ்.எஸ்.எஸ். கல்லூரி தலைவர் நடராஜன், பெங்களூரு சமூகசேவகர் பழனிகாந்த், அரசு வக்கீல் அண்ணாமலை, டாக்டர் தொப்ப கவுண்டர், விழாக்குழு செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கவுதமன் மற்றும் தொழிலதிபர்கள், நன்கொடை யாளர்கள், வன்னிய குல சத்திரிய மரபினர்கள் மற்றும் 6-ம் நாள் யானை வாகன பெருவிழா குழுவினர், பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
    ×