search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரத்து கால்வாய்"

    • எக்ககுடி ஊராட்சியில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    • ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம், எக்ககுடி ஊராட்சியில் பாசன கண்மாயை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது எக்ககுடி ஊராட்சி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பாசன கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சேதமடைந்தும், ஆக்கிரமிப்பு களாலும் தண்ணீர் வராமல் விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பாசன கண்மாயை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதுக்குளம், கொத்தங்குளம் பாசன கண்வாய்களுக்கு எட்டிவயல் கால்வாய் மற்றும் ரகுநாதபுரம் கால்வாய் வழியாக வைகை ஆற்றில் இருந்து இந்த பகுதிகளுக்கு பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் வந்தது. தற்போது 2 கால்வாய்களும் ஆக்கிர மிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிகள் இல்லாமல் இருந்து வரும் நிலையை பார்வை யிட்டதுடன் உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கி ணைந்து கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பின்னர் கொத்தங்குளம், எக்ககுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவி களிடம் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியில் சுகாதார வளாகம் தூய்மையாக உள்ளதா? என பார்வையிட்டார்.

    தூய்மை பணியா ளர்களிடம் குழந்தைகள் பயன்பாட்டிற்குள்ள சுகாதார வளாகங்கள் தூய்மையாக இருக்கும் வகையில் தினமும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து எட்டிவயல் பெரிய கண்மாயின் கழுங்கு பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளை சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எட்டிவயல் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தை பார்வையிட்டு அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான புத்தகங்கள் இருப்பு வைக்க வேண்டும்.

    ஊராட்சிகளில் நாள்தோறும் சேரிக்கக் கூடிய குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தரம் பிரித்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற ஊராட்சிகளில் ஆய்வின்போது திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படாமல் இருப்பது கண்டறிந்தால் அந்த ஊராட்சியில் அபராதம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராமர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் மற்றும் விவ சாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ×