என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வட மாநில வாலிபர்கள் கைது"
- பல்லடம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர்.
- வடமாநில வாலிபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள எம்.ஊத்துக்குளி பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி தனியே வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்கள் 3 பேர், வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் அவர் கொடுத்த புகாரின் பேரில், தப்பியோடிய வடமாநில வாலிபர்களான அமருஇஸ்லாம், அனிப்அலி, இப்ராகிம் அலி ஆகிய 3 பேரை பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்