search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லீனா"

    • நடிகை லீனா நாயர் தமிழில் தனுஷ் நடித்த அனேகன், விக்ரம் நடித்த கடாரம்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    • எங்களது திருமணம் பற்றிய செய்தி வெளியானதும் எனக்கு பல அழைப்புகள் வந்தன.

    ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் விவரங்களை பிரதமர் நரேந்திரமோடி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் அறிவித்தார்.

    அவர்களில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த விமானப்படை வீரரான பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் ஒருவர் ஆவார். வீரர்கள் அறிமுக விழாவில், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர். அப்போது பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருடன் பிரபல மலையாள நடிகை லீனா நாயர் வந்திருந்தார்.

    அதன்பிறகு அவர் தனக்கும், பிரசாந்த் பால கிருஷ்ணன் நாயருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த விவரத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். தனக்கும், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயருக்கும் கடந்த ஜனவரி மாவதம் 17-ந்தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்ததாகவும், தங்களது திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    நடிகை லீனா நாயர் தனது திருமணத்தை பல நாட்கள் மறைத்து வைத்திருந்த காரணத்தையும் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக தனது கணவர் இருந்ததால், தங்களின் திருமண விவரத்தை வெளியிடாமல் இருந்ததாகவும், இந்நிலையில் விண்வெளி செல்லும் வீரர்களை பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட கவுரமிக்க சூழலில், தங்களின் திருமணத்தை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    நடிகை லீனா நாயர் தமிழில் தனுஷ் நடித்த அனேகன், விக்ரம் நடித்த கடாரம்கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு அபிலாஷ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    தங்களுக்கு இடையே ஏற்ட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு நடிகை லீனா நாயர் தனது பெற்றோருடனே வசித்து வந்தார். பின்பு சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்த அவர், தற்போது விண்வெளி வீரர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார்.

    தங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது எப்படி? அது திருமணம் வரை வந்தது எப்படி? என்று நடிகை லீனா நாயர் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    என்னுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் மலையாளிகளும், எனது பார்வையாளர்களும் என்னை எப்போதும் ஆதரித்துள்ளனர். அவர்கள் என்னை எப்போதும் தங்களின் சொந்த குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்கள்.

    எங்களது திருமணம் பற்றிய செய்தி வெளியானதும் எனக்கு பல அழைப்புகள் வந்தன. அதில் நான் மிகவும் மிகிழ்ச்சியடைந்தேன். மக்கள் என்னை தங்களின் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    நான் மதம், உறவு மற்றும் மனநலம் போன்ற தலைப்புகளை பற்றி பேசிய வீடியோ இணையத்தில் பரவியது. அது ட்ரோல்களையும், விருப்பு வெறுப்புகளையும் கொண்டுவந்தது. அப்போது தான் பிரசாந்த் எனது வாழ்க்கையில் நுழைந்தார்.

    எனது வீடியோவை பிரசாந்த் பார்த்து என்னை தொடர்பு கொண்டார். நாங்கள் ஒருவரையொருவர் தெரிந்து கொண்டபோது, நாங்கள் ஒரே அதிர்வை பகிர்ந்துகொண்டோம் என்பதை உணர்ந்தோம். எங்களது இருவரின் குடும்பமும் எங்களுடையே ஜாதகங்களை சரி பார்த்தனர்.

    அது சரியாக பொருந்துகிறது என்பதை தெரிந்துகொண்டோம். இதனால் திருமணம் செய்து கொண்டோம். ககன்யான் குழுவை பிரதமர் வெளிப்படுத்தும் வரை சில நெறிமுறைகளை பிரசாந்த் பின்பற்ற வேண்டியதாயிற்று.

    அதன் காரணமாக எங்களின் திருமண விவரத்தை உடனடியாக பகிர அனுமதிக்கப்படவில்லை. இந்த காரணங்களால் எங்களின் திருமணத்தில் பிரசாந்தின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இவ்வாறு நடிகை லீனா நாயர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் நடிகை லீனா நாயரை திருமணம் செய்துகொண்டது குறித்து பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயரும் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நான் யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது லீனாவின் வீடியோவை பார்த்தேன். அந்த நேர்காணலில் உள்ள பெரும்பாலான தலைப்புகளுக்கு நான் ஒப்புக்கொண்டேன். ஆகவே லீனாவை தொடர்பு கொண்டு நான் பேசினேன். திருமண திட்டத்துடன் நான் அவரை அணுகினேன். அவரும் என்னைப்போலவே மகிழ்ச்சியாக இருந்தார்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ×