search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோகிணி பொறியியல்"

    • ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்
    • 41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்தது

    நாகர்கோவில், ஜூலை.16-

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கபடி அணி மாணவர்கள் ஆவரைகுளம் தென் ஆவரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்.41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்து சுழற் கோப்பையையும். ரூ.10 ஆயிரத்தையும் வென்றனர். பரிசு பெற்ற கல்லூரியின் கபடி அணி வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரை கல்லூரியின் தலைவர் நீலமார்த்தண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்சி ஜியோ, கல்லூரியின் முதல்வர் ராஜேஷ், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    ×