search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசிங் சர்க்யூட்"

    • பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்சைடரில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியவை இணைந்து நடத்தும் ரேசிங் சர்க்யூட் பார்முலா-4 கார் பந்தயம் சென்னையில் வருகிற டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப் பட உள்ளது.தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.

    பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தெற்காசியாவின் முதல் பார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தயங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

    டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்சைடரில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கிராண்ட் ஸ்டான்ட் ரூ.1000, பிரீமியம்-ரூ.4 ஆயிரம், கோல்டு ரூ.7 ஆயிரம், பிளாட்டினம் ரூ.10,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    ×