search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஷ்மிகா"

    • நடிகை ராஷ்மிகா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
    • இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.


    ராஷ்மிகா மந்தனா

    தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. மேலும், இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    ராஷ்மிகா மந்தனா

    இதையடுத்து நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகிறார்கள் என தகவல் பரவி வந்தது. இது குறித்து விளக்கமளித்த ராஷ்மிகா "இந்த வதந்திகள் மிகவும் அழகாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.

    • கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களில் கவனத்தை ராஷ்மிகா ஈர்த்தார்.
    • சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.


    ராஷ்மிகா மந்தனா

    தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. மேலும், இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    ராஷ்மிகா மந்தனா

    நடிகை ராஷ்மிகா மும்பையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார். இவர் வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் எதிரில் கூடியுள்ளனர். ராஷ்மிகா கோவிலை விட்டு வெளியே வந்தபோது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருடன் கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். பாதுகாவலர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

    பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே அழைத்து வரப்பட்டு காரில் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    ×