search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ கிளர்ச்சி"

    • அப்துரஹ்மானே சியானி தன்னைத்தானே புது அதிபராக அறிவித்துக் கொண்டார்
    • நைஜர் ஜன்தாவை ஆட்சியாளர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்கிறது பிரான்ஸ்

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர். இதன் தலைநகர் நியாமே.

    இங்கு அதிபராக இருந்த மொகமெட் பசோம் (Mohamed Bazoum), ஜன்தா (junta) எனப்படும் ராணுவ குழு நடத்திய சிறு கிளர்ச்சியால் கடந்த ஜூலை 26 அன்று பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

    இவருக்கு பதிலாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி (Abdourahamane Tchiani) தன்னைத்தானே புது அதிபராக அறிவித்து கொண்டு ஆட்சியில் அமர்ந்தார்.

    முன்னாள் அதிபரும் அவர் குடும்பத்தினரும் சிறை வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்தா அமைப்பு 21 பேர்களை கொண்ட ஒரு புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS) இந்த ஆட்சி மாற்றத்தை அங்கீகரிக்கவில்லை. மீண்டும் பசோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டுமென்று ஜன்தா அமைப்பிற்கு எகோவாஸ் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இதற்கு ஜன்தா பணியவில்லை.

    நைஜரில் அமைதியான முறையில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டு வர அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயற்சித்தன. ஆனால் அவையும் தோல்வியில் முடிந்தது.

    ஆகஸ்ட் 18 அன்று, "முடிவில்லாத பேச்சுவார்த்தையை ஜன்தா அமைப்புடன் நடத்த முடியாது. தேதி அறிவிக்காமல் ஒரு முக்கிய நாளில் ராணுவ ரீதியாக நைஜரில் ஜனநாயகத்தை மலரச் செய்வோம்" என எகோவாஸ் அமைப்பு அறிவித்தது.

    இந்த எச்சரிக்கையையும் ஜன்தா அலட்சியப்படுத்தியது.

    இந்நிலையில் தற்போதைய நைஜர் அரசு, பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தூதர்கள், நைஜர் நாட்டை விட்டு 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளது.

    "நைஜர் ஜன்தாவை ஆட்சியாளர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை" என பிரான்ஸ் நாடு உடனடியாக பதிலளித்தது.

    தொடர்ந்து நடக்கும் ரஷிய - உக்ரைன் போரினால் சரிந்து வரும் உலக பொருளாதாரம், மற்றொரு போர் நைஜரில் ஏற்பட்டால் மேலும் பாதிப்படையலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • முகமது பசோம் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
    • ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எகோவாஸ் எச்சரித்திருக்கிறது

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.

    அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

    பாதுகாப்பின்மையை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி ஜூலை 26-ம் தேதி ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பசோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

    நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி (Abdourahamane Tchiani) என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.

    ராணுவ அமைப்பு பதவி விலகி, பசோம் மீண்டும் பதவியில் அமர வைக்கப்படவில்லை என்றால் கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS) அறிவித்திருக்கிறது.

    இதனையடுத்து அந்நாட்டின் தலைநகரமான நியாமே (Niamey) நகரில் உள்ள குடிமக்கள் அங்கு தற்போது ஆளும் ராணுவ அமைப்பில் பல்லாயிரக்கணக்கில் தன்னார்வலர்களை சேர்த்து கொள்ள அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    எகோவாஸ் எடுக்க கூடிய ராணுவ நடவடிக்கையில் இருந்து தாய்நாட்டை காக்கும் வகையில் போரிடவும், மருத்துவ உதவிகள் செய்யவும், தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து செயல்பாடுகளில் உதவவும், பெருமளவில் தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

    இதன்படி 18 வயதை கடந்த எவரும் தானாக முன்வந்து சேவை செய்ய விரும்பினால் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    ×