என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ராணிப்பேட்டை வனக்குழு
நீங்கள் தேடியது "ராணிப்பேட்டை வனக்குழு"
திருவள்ளூர் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை ராணிப்பேட்டை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #RedSanders
வாலாஜா:
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் சமீபத்தில் 3 செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதையறிந்த தலைமை வனப் பாதுகாவலர் சேவாசிங் தலைமையிலான குழுவினர் செம்மர கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகை அடுத்த ஆந்திர மாநில எல்லையில் உள்ள தாடூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை வனக்குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தாடூருக்கு வனக்குழு விரைந்தது. அங்கு உள்ள கரும்பு தோட்டத்தில் மாந்தோப்பிற்கு நடுவில் ரூ.1¼ டன் எடையுள்ள 55 சிறு, சிறு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுற்றியும் தேடி பார்த்தபோது, கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரும் சிக்கவில்லை.
இதையடுத்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. முதல் ரக செம்மரக்கட்டைகள் என்பதால், ஆந்திர மாநிலம் சேஷாச்சல வனப்பகுதியில் வெட்டி கடத்தியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், அம்மூர் காப்புக்காட்டில் வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகள் சிக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் பார்கவேதேஜா, உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன், வனச்சரக அலுவலர் மூர்த்தி, வனவர்கள் ஜனார்த்தனன், ரகுபதி ஆகியோர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSanders
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் சமீபத்தில் 3 செம்மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதையறிந்த தலைமை வனப் பாதுகாவலர் சேவாசிங் தலைமையிலான குழுவினர் செம்மர கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகை அடுத்த ஆந்திர மாநில எல்லையில் உள்ள தாடூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை வனக்குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தாடூருக்கு வனக்குழு விரைந்தது. அங்கு உள்ள கரும்பு தோட்டத்தில் மாந்தோப்பிற்கு நடுவில் ரூ.1¼ டன் எடையுள்ள 55 சிறு, சிறு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சுற்றியும் தேடி பார்த்தபோது, கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரும் சிக்கவில்லை.
இதையடுத்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து ராணிப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. முதல் ரக செம்மரக்கட்டைகள் என்பதால், ஆந்திர மாநிலம் சேஷாச்சல வனப்பகுதியில் வெட்டி கடத்தியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், அம்மூர் காப்புக்காட்டில் வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகள் சிக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் பார்கவேதேஜா, உதவி வன பாதுகாவலர் ஈஸ்வரன், வனச்சரக அலுவலர் மூர்த்தி, வனவர்கள் ஜனார்த்தனன், ரகுபதி ஆகியோர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSanders
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X