search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணி தோட்டம்"

    • அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்,
    • டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்


    நாகர்கோவில் :அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், போதிய தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் அற்புதராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சுவாமி, செந்தில்குமார், நடேசன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சேதமடைந்துள்ள பஸ்களை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும்
    • கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பல பஸ்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை நீக்கிவிட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், தங்க மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மோகன், ராஜ்குமார், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ×