search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுகாதி பெருவிழா"

    • ரேணுகாதேவி அம்மனுக்கு நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக நடனமாடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சமூக நலச் சங்கம் சார்பில் 10-ம் ஆண்டு யுகாதி பெரு விழா பொள்ளாச்சி சாலையில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .முதலில் அலங்கரிக்கப்பட்ட ரேணுகாதேவி அம்மனுக்கு நிர்வாகிகள் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. குறிப்பாக மண் பானையில் மீது சிறுமிகள் நடனம், பாம்பு நடனம், மயில் நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பல்வேறு விதமான போட்டிகள்நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக நடனமாடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நீலகிரி மாவட்ட நாயுடு மகா சங்கம், லஜபதி நாயுடு, கோவை டீம் 3 அசோசிேயட்ஸ் சம்பத்குமார் , கவர நாயுடு மகாஜன கூட்டமைப்பு தலைவர் திருப்பதி, கல்வி அறக்கட்டளை கவர நாயுடு மகாஜன சங்கம் தலைவர் ஆனந்தகுமாரி, ஆனந்த பத்மநாபன், கவர சமூக நல அறக்கட்டளை சிவக்குமார், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுக்கா கவர நாயுடு சங்க தலைவர் அரிமா லோகநாதன்,செயலாளர் அரிமா ராமதுரை, பொருளாளர் ஜெக நாதன் ,துணை செய லாளர் சிவக்குமார் ,தலைமையிடத்து செயலாளர் முருகே சன், ஆலோசகர் சுப்பு ராமன், துணைத் தலை வர்கள் துரைசாமி, வெங்கட்ராமானுஜம், சட்ட ஆலோசர்கள் ஜோதி நாகராஜன் , சீனி வாசன் , சரவணகுமார், கொழுமம் தாமோதரன், குறிச்சிக்கோட்டை கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொ ண்டனர்.

    ×