search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள் சேதப்படுத்திய கடைகள்"

    • மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது.
    • சேதமடைந்த கடைகளை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் , துணைத் தலைவர் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது . இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    கொடை க்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான சுற்றுலா பகுதியாக உள்ள மோயர் சதுக்கம் பகுதியில் நேற்று 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உலா வந்து கடைகள் முழுவதையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இரண்டு நாட்களாக தடை நீடித்து வருகிறது. தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் காட்டு யானைகளால் சேதமடைந்த கடைகள் மற்றும் சுற்றுலா பகுதியை கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர் . மேலும் யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    ×