search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்கள் தீ"

    • ரவுடி நரேஷ் குமாரின் எதிரிகள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • தீ வைத்தவர்கள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை டி.பி.சத்திரம் 3-வது தெருவில் வசித்து வருபவர் நரேஷ்குமார். ஏ.பிளஸ் வகை ரவுடி. இவரது வீட்டு முன்பு நேற்று இரவு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    இவைகளில் 2 மோட்டார் சைக்கிள்கள், 3 சைக்கிள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு தீ வைத்து எரித்தனர்.

    பெட்ரோலை ஊற்றி இந்த வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை பார்த்து நரேஷ்குமாரின் மனைவி அருணா தேவியிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியில் வந்து பார்த்தார். இதற்கிடையே அந்த வழியாக ரோந்து போலீசாரும் வந்தனர். இரவு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் தீ வைத்தது யார்? என்பது தெரியவில்லை. ரவுடி நரேஷ் குமாரின் எதிரிகள் யாரேனும் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் உள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கேமராக்கள் அங்கு இல்லை. இதனால் தீ வைத்தவர்கள் யார்? என்பதை உடனடியாக கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ×