search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோசடிகள்"

    • போலீஸ், பிரஸ் என போலி ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    • பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது சிலர் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும், குற்ற செயல்களில் செய்து விட்டு தப்பி செல்வதற்காவும் தங்களது இருசக்கர வாகனங்களில் போலீஸ் என்றும் பிரஸ் மற்றும் மீடியா போன்ற போலி ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து கொண்டு உலா வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;- போலி ஸ்டிக்கர் ஒட்டியுள்ள நபர்கள் சில இடங்களில் அப்பாவி பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தும், சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குடித்து விட்டும் வாகனம் ஓட்டுகின்றனர்.

    சிலர் அதனை செய்பவர்களுக்கும் உடந்தையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகி்றது. இது போன்ற நபர்களால் போலீசாருக்கும் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இ்ந்த போலி ஸ்டிக்கர் ஒட்டிள்ள நபர்கள் நடந்து கொள்கிறார்கள். மேலும் தருமபுரி, அரூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளில் இதுக்கு தனியாக போலீசாரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டி வரும் நபர்களை பிடித்து, அவர்கள் அடை யாள அட்டை மற்றும் அவர்களது முகவரியை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • மோசடிப் பேர் வழிகள், அப்பாவி பொதுமக்களை தொடர்பு கொண்டு, மும்பை குற்றப்பிரிவு போலீசில் இருந்து நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
    • கொரியர் நிறுவனம் மூலம் போதைப் பொருள் கடத்தியதாக கூறி, விசாரணைக்காக அவரை 'ஸ்கைப்' வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டுவர்கள்.

    திருப்பூர்:

    போலீசார் பேசுவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    'மோசடிப் பேர் வழிகள், அப்பாவிகளை தொடர்பு கொண்டு, மும்பை குற்றப்பிரிவு போலீசில் இருந்து பேசுவதாகவும், கொரியர் நிறுவனம் மூலம் போதைப் பொருள் கடத்தியதாக கூறி, விசாரணைக்காக 'ஸ்கைப்' வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டுவார்கள்.

    அதன் பிறகு விசாரணையை வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவிப்பார்கள். இதை உண்மை என நம்பும் பொதுமக்கள், அவர்கள் கூறும் கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர்.அதன் பின்னரே இது மோசடி என தெரிய வருகிறது. இதில் பலர் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.

    ஆகவே திருப்பூர் மக்கள் போதை தடுப்பு பிரிவு போலீசார் பேசுவதாக அழைப்புகள் வரும் போது, எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×