search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலும் ஒரு வீடு இடிந்தது"

    • மேலும் ஒரு வீடு இடிந்தது
    • மேலும் ஒரு வீடு இடிந்தது

    மேலும் ஒரு வீடு இடிந்ததுநாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் குளு குளு சீசன் நிலவுகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவில் அடையா மடை பகுதிகளில் இடி மின்னலுடன் இரவு கனமழை கொட்டி தீர்த் தது. அடையாமடையில் அதிகபட்சமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது.

    கொட்டாரம், தக்கலை, இரணியல், கோழிப்போர் விளை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதி களிலும் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    12-வது நாளாக தடை

    பேச்சிப்பாறை அணை யில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது. இதனால் கோதை ஆற்றில் வெள் ளம் கரைபுரண்டு ஓடு கிறது. கோதை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள் ளப்பெருக்கின் காரண மாக திற்பரப்பு அருவி யில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இதனால் 12-வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்கு பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வரு கின்றன.

    மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அருமநல்லூர், ெதரிசனங் கோப்பு, ஈசாந்திமங்கலம், சுசீந்திரம், தக்கலை பகுதி களில் வயல் உழவுப் பணி மற்றும் நடவு பணி நடந்து வருகிறது.

    மழையின் காரண மாக ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட் டுள்ளது. தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.34 அடியாக உள்ளது. அணைக்கு 570 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 122 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 536 கன அடி தண்ணீர் உபரிநீராகவும், வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது அணைக்கு 432 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 15.28 அடியாக உள்ளது. அணைக்கு 211 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.38 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.90 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 44.80 அடியாகவும் உள்ளது.

    மழைக்கு ஏற்கனவே 15-க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து உள்ள நிலையில் நேற்று கிள்ளியூர் தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ×