search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்குவங்க தொழிலாளி"

    • மேற்கு வங்க மாநிலம் குழிகுக்வா பகுதியை சேர்ந்த காசியான் என தெரியவந்தது.
    • காசியானின் விசா காலம் முடிவடைந்தும் அதனை புதுப்பிக்காமல் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல் திட்டில் இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்திற்கிடமாக நின்றிந்தார். இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனே மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் குழிகுக்வா பகுதியை சேர்ந்த காசியான்(வயது 41) என தெரியவந்தது. நகை ஆசாரியான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    காசியானின் விசா காலம் முடிவடைந்தும் அதனை புதுப்பிக்காமல் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதால் நாடு திரும்ப முடிவு செய்தார். ஆனால் விசா இல்லாததால் இலங்கயைில் இருந்து கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடிக்கு காசியான் வந்துள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×