search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி மீது தாக்குதல்"

    • சேலம் பள்ளப்பட்டியில் நாய் துரத்தியதை தட்டிக்கேட்ட மூதாட்டி தாக்கப்பட்டார்.
    • இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேலம்:

    சேலம் பள்ளப்பட்டி அங்கம்மாள் காலனி அருகே உள்ள சின்னேரி வயக்காடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மனைவி மாதேஸ்வரி (வயது 67). இவரது பேரன் சச்சின், தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த ஒரு நாய், சச்சினை துரத்தி கடிக்க துரத்தியது. இதனால் பயந்து போன சச்சின் தலை தெறிக்க ஓடினான்.

    இதைக் கண்ட அவரது பாட்டி மாதேஸ்வரி, அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் கோவிந்தராஜ் மனைவி கனகா (31) என்பவரிடம், உங்கள் வீட்டு நாய் ஏன் என் பேரனை துரத்துகிறது. அதை கட்டி வைக்க மாட்டீர்களா என்று தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கனகா, கோவிந்தராஜன் ஆகியோர் மாதேஸ்வரியை தாக்கி உள்ளனர்.

    இதில் காயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கனகா மற்றும் கோவிந்தராஜ் ஆகியோரை மாதேஸ்வரியின் உறவினர்கள் தாக்கியதாக கொடுத்த புகார் பேரிலும், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×