search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருக பக்தர்கள்"

    • புஷ்பக் காவடி எடுத்தல், தால் அலகு நாக்கு அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • மேளதாளம் முழங்க தெப்பக்குளம் சென்று முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டபட்டியில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி மூன்று கால சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை அணிந்து விரதம் இருந்து முருக பக்தர்களுக்காக ஆற்றில் கங்கணம் கட்டுதல், காவடி ஆலங்கரித்தல் சக்தி கிரகம் அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை பூ கிரகம் எடுத்தல், மார்பில் ஆட்டாங்கல் வைத்து மஞ்சள் இடத்தில், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எடுத்தல், தால் அலகு நாக்கு அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதன் பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மேளதாளம் முழங்க தெப்பக்குளம் சென்று முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி மணி உட்பட பலர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

    • முத்தாரம்மன் கோவிலில் 49-வது வருட காவடி கட்டு விழா நடக்கிறது
    • காவடி கட்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட கோவில்கள் களைக்கட்டி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    முருக கடவுளின் 2-வது அறுபடை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் முருக பக்தர்கள் காவடி கட்டி செல்வது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி கட்டி தயாராகி வருகின்றனர்.

    குளச்சல் பகுதியில் புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோவிலில் 49-வது வருட காவடி கட்டு விழா நடக்கிறது. இதுபோல் சாம்பசிவபுரம் சிவன் மற்றும் துர்கா தேவி கோவிலில் தூக்க பறக்கும் காவடி, புஷ்ப காவடி, சாஸ்தான்கரை தெற்கு கள்ளியடைப்பு வீரபத்ர காளியம்மன் கோவிலில் புஷ்ப காவடி, 6 அடி வேல் காவடி, பறக்கும் காவடி, பாறக்கடை மகாதேவர் கோவிலில் பறக்கும் காவடி, புஷ்ப காவடி, மாதனாவிளை ஸ்ரீமன் பத்மநாப சுவாமி கோவிலில் எண்ணை காவடி, மேலத்தெரு தேசிக விநாயகர் கோவிலில் எண்ணை காவடி, கீழத்தெரு இசக்கியம்மன் கோவிலில் எண்ணை காவடி, வெள்ளங்கட்டி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் எண்ணை காவடி, இரும்பிலி கோவில்விளை அம்மன் கோயிலில் எண்ணை காவடி, சன்னதி தெரு முத்தாரம்மன் கோவிலில் பறக்கும் காவடி, எண்ணை காவடி, பள்ளிவிளாகம் உஜ்ஜையினி மாகாளி கோவிலில் புஷ்ப காவடி ஆகிய காவடிகள் கட்டப்பட்டு திருச்செந்தூர் புறப்பட்டு செல்கிறது.

    நாளை இரவு இந்த காவடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, சனிக்கிழமை காலை மற்றும் பகல் வேளையில் ஊரில் திரு வீதி உலா செல்கிறது.

    மாலை அனைத்து காவடிகளும் குளச்சல் ஆலடி அதிசய நாகர் ஆலயம் சந்திப்பு வந்தடைந்து, திங்கள்நகர், நாகர்கோவில், ஆரல்வாய் மொழி, முப்பந்தல் வழியாக திருச்செந்தூர் சென்றடைகிறது. காவடி கட்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட கோவில்கள் களைக்கட்டி காணப்படு கிறது.

    ×