search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முப்பழ பூஜை"

    • திருப்பரங்குன்றத்தில் முப்பழ பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த இன்று (24-ந் தேதி) ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் மக்கள் சுப்பிர மணிய சுவாமி தெய்வா னையுடன் கோயிலில் உள்ள திருவாச்சி மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளினார்.

    அங்கு கோவில் ஓதுவார் பொன்னூஞ்சல் பாடி சிறப்பு தீபாரனை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முப்பழ பூஜை இன்று நடைபெற்றது.

    விழாவினை முன்னிட்டு கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள், சத்யகிரீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு மா பலா வாழை என முப்பழங்கள் கொண்டு சம காலத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து மா, பலா, வாழை என முக்கனிகளை உற்சவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    ×