search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னுதித்த நங்கையம்மன்"

    • திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்கும் நிகழ்வு
    • வழிநெடுக பக்தர்கள் வரவேற்பு

    நாகர்கோவில்:

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநக ராக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் இருந்தபோது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. பின்னர், தென் திருவிதாங்கூர் தலைநகர் திருவனந்த புரத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த நவராத்திரி விழாவும், திருவ னந்தபுரம் அரண்மனைக்கு மாறியது.

    இதற்காக ஆண்டுதோ றும் குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சாமி விக்ரகங்கள் திருவனந்தபு ரம் சென்று வருவது காலந் தொட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி விக்ரகங்கள் வரும் 23-ந் தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன.

    இந்த விழாவில் பங்கேற்க நாளை (22-ந் தேதி) சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம் மன் விக்ரகம் பத்மநாபபு ரம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது வரும் 23-ந் தேதி காலையில் வேளிமலை குமாரசுவாமி விக்ரகம் பதம நாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.

    பின்னர் அங்கிருந்து கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் விக்ரகங்கள் பவனி தொடங்கும் முன்ன தாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் மன்ன ரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் வரும் 23-ந் தேதி காலை 7.30-க்கு நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக, கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கெட்டு வந்தடையும் சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டுவரப்பட்டு பூஜை கள் செய்யப்படும். அங்கி ருந்து அரண்மனை தேவா ரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்கில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை வேளிமலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண் களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும்.

    இந்த பவனி வரும் 25-ந் தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங்கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத் திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவி லிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலும் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின்னர் விஜ யதசமி முடிந்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தடையும்.

    நாளை (22-ந் தேதி) காலை சுசீந்திரம முன்னுதித்த நங்கையம்மன் பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. தமிழக போலீசார்துப்பாக்கி அணிவ குப்பு மரியாதையுடன், அம் மன் புறப்பாடு நடைபெறும். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்ததால் வழி நெடுக மக்கள் வரவேற்பு அளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரியமுறைப்படி சுவாமி விக்ரகங்களுக்கு பக்தர்கள் வழி நெடுக வரவேற்பு அளிக்கும் நிகழ்வும் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அறநிலையத்துறை அதிகா ரிகள் செய்துள்ளனர்.

    ×