search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்வள உதவியாளர்"

    • விண்ணப்பிக்க ஜூலை 7-ந் தேதி கடைசி நாள்
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நாகர் கோவில், மீன்வளம் மற் றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தில் காலியாக உள்ள மூன்று மீன்வள உதவி யாளர் காலிப்பணியிடத் தினை அரசாணையில் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திலிருந்து நடைமுறை யிலுள்ள விதிகளின்படி இச் சுழற்சி முறையில் பெறப்படும் பட்டியலிலி ருந்தும், தினசரி நாளித ழின் வாயிலாக விளம்பரம் செய்து பெறப்படும் விண் ணப்பங்கள் மூலமாகவும் நிரப்பப்படவுள்ளது.

    எனவே தற்போது நடைமுறையில் உள்ள இனசுழற்சி முறையில் மிக வும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன் னுரிமை பெற்றவர். பிற்ப டுத்தப்பட்ட வகுப்பினர் முன்னுரிமை பெற்றவர், பொதுப்போட்டி முன் னுரிமையற்றவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மீன்வள உத வியாளர் பணியிடத்திற்கு 01.01.2022 அன்றுள்ளபடி பொதுபிரிவு-32 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப் பினர், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் 34 வயது மற்றும் ஆதி திராவி டர்அருந்ததியினர்-37வய திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தமிழில் எழுத, பேச தெரிந்திருக்கவேண் டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். மீன்பிடி வலை பின்னவும் மற்றும் அறுந்த வலைகளை சரிசெய்யவும் தெரிந்திருக்கவேண்டும். மற்றும் மீன்வளத்துறை யின் கீழ் உள்ள ஏதேனும் மீனவர் பயிற்சி நிலையத் தில் பயிற்சி மேற்கொண் டமைக்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும்.

    மேலே குறிப்பிட்டுள்ள தகுதியுடையவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குநர், (மண்டலம்) கன்னியாகு மரி, (இருப்பு) நாகர்கோ வில் டிஸ்டில்லரி ரோடு, வடசேரி என்ற முகவரியில் செயல்படும் அலுவல கத்திற்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந் தப்பட்ட சான்றிதழ் நகல் களுடன் 07.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிட அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    ×