என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மின்வாரிய அதிகாரியின் மகள் தற்கொலை
நீங்கள் தேடியது "மின்வாரிய அதிகாரியின் மகள் தற்கொலை"
தருமபுரியில் மின்வாரிய அதிகாரியின் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த சித்தேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவர் மின்வாரிய துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சிபிதா (வயது 15). இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் பாத்ரூமுக்கு சென்றார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டில் இருந்த உறவினர்கள் பாத்ரூமின் கதவை தட்டினர். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த அவர்கள் பாத்ரூமின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிபிதா பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். உடனே உறவினர்கள் சிபிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் உடனே அங்கு விரைந்து சென்று சிபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிபிதாவை பெற்றோர்கள் திட்டியதால் தூக்குபோட்டு தற்கொலை கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X